Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

செங்கல்பட்டில் குவியல் குவியலாக குண்டுகள் கைப்பற்றப்பட்டது

டிசம்பர் 12, 2019 08:49

சென்னை: செங்கல்பட்டு அருகே விவசாயி வீட்டில் குவியல்குவியலாய் ராணுவ குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
செங்கல்பட்டு அடுத்த அனுமந்தபுரம் பகுதியில் வசிப்பவர் ராமகிருஷ்ணன். இவருக்குச் சொந்தமாக அனுமந்தபுரத்தில் உள்ள ராணுவ பயிற்சி மையத்துக்கு அருகில் விவசாய நிலம் உள்ளது. வழக்கம்போல் இன்று தன்னுடைய விவசாய நிலத்துக்குச் சென்றார். நிலத்தைச் சுற்றிபார்த்துவிட்டு வீட்டுக்கு கிளம்பும்போது அங்கு குண்டு ஒன்று இருந்ததைக் கண்டார். உடனே அதை எடுத்தவர் வீட்டுக்கு கிளம்பும்போது இருசக்கர வாகனத்தின் முன்பகுதியில் அதை வைத்துக்கொண்டார்.

அனுமந்தபுரம் சாலையில் செல்லும்போது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த அந்தக் குண்டு தவறி கீழேவிழுந்து வெடித்தது. இதில் ராமகிருஷ்ணனுக்கு கை, கால் மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. மேலும், வெடிகுண்டு சிதறியதில் சாலையோரத்தில் சலவைப் பெட்டி கடையில் வேலை செய்துகொண்டிருந்த கோவிந்தம்மாள் என்பவரின் மீதும் வெடிகுண்டு துகள்கள் பாய்ந்தன. 

இந்தநிலையில் ராமகிருஷ்ணன் வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது வீடு முழுக்கவே வெடிகுண்டுகள் குவியல் குவியலாய் கிடந்தன. வெடிக்காத 3 ராக்கெட் லாஞ்சர்கள், சுமார் 60-க்கும் மேற்பட்ட வெடித்த நிலையில் உள்ள குண்டுகளின் பாகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஒருசில குண்டுகள் பாதி வெடித்த நிலையிலும் இருந்திருக்கின்றன. இந்தக் குண்டுகள் அனைத்தும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டு முருகமங்களம் வெடிகுண்டு கிடங்கில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

வெடிகுண்டு வெடித்துச் சிதறியபோது அருகில் உள்ள சுவர், மரம் இரும்புக் கம்பி என அனைத்தையும் துளைத்திருக்கிறது. இந்த வகை குண்டுகள் வெடித்தால் அதன் பாகங்கள் சுற்றுவட்டாரம் முழுவதும் சிதறி சேதத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்திருக்கிறது.

தலைப்புச்செய்திகள்